அவினாசி-பெண் போலீஸ் கற்பழித்துக் கொலை
Subscribe to Oneindia Tamil
அவினாசி: அவினாசி அருகே பெண் காவலர் ஒருவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூரில் நடந்த ஈஷா அறக்கட்டளை மரக் கன்று நடும் விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க வந்தார். அவரது பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசான ஜெயமணியும் (40) பாதுகாப்புப் பணிக்காக வந்தார். ஆனால், அவர் அன்றிரவு வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார்.
இந் நிலையில் அவினாசி அருகே பெருமாநல்லூர் வனப் பகுதிக்குள் ஜெயமணி பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது சீருடை அவிழ்க்கப்பட்டு தனியாகக் கிடந்ததால் அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications