சென்னையில் மீண்டும் ஒரு மெகா நிதி நிறுவன மோசடி
சென்னை: தமிழகத்தில் ரூ. 1,000 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது ஒரு நிதி நிறுவனம். இந்த நிறுவனத்தி்ன் உரிமையாளர் வெளிநாடு தப்பிவிடாமல் தடுக்க அவரது பாஸ்போர்ட் மும்பை போலீசார் முடக்கியுள்ளனர்.
சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சிட்டி லிமோஸின்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிதி நிறுவனம் கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்துக்கு டெல்லி, மும்பை, புனே, ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் கிளைகள் உள்ளன.
அதே போல அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளதாக இந்த நிறுவனம் கூறுகிறது.
சென்னையில் இந்த நிறுவனத்தில் சுமார் 40,000 பேர் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால், வாடிக்கையாளர்களுக்கு காசோலை மூலம் அனுப்பும் லாபத் தொகையை கடந்த சில மாதங்களாகவே இந்த நிறுவனம் அனுப்பவில்லை. இதனால் மும்பையில் இந்த நிறுவனம் மீது வாடிக்கையாளர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே புகார் கொடுத்து விட்டனர்.
இந் நிலையில் சென்னையிலும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பணம் வருவது நின்று போய்விட்டதாக போலீசில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் இந்த நிறுவனமும் கடந்த சில நாட்களாகத் திறக்கப்படவில்லை.
சென்னையில் இதுவரை 40 பேர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு்ள்ளது.
இந் நிறுவனத்தின் உரிமையாளர் பெயர் சையத் மசூத் மும்பையில் வசித்து வருகிறார். இவரது குடும்பம் அமெரிக்காவில் வசிப்பதாகத் தெரிகிறது.
மசூத் மீது இவர் புகார்கள் குவிந்துள்ளதால் இவரது பாஸ்போர்ட்டை மும்பை போலீசார் முடக்கி விட்டதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில், சிட்டிலிமோஸின்ஸ் நிறுவனம் தாங்கள் மோசடி எதுவும் செய்யவில்லை என்றும், முதலீட்டாளர்களிடம் வசூலித்த பணம் முழுவதும் பத்திரமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும், விரைவில் வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி தருவோம் என்றும் அறிவித்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications