டுரன்டோ ரயில்-கொடியசைத்து துவக்கி வைத்தார் சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil

காலை சுமார் 6.40 மணிக்கு இந்த விழா நடந்தது. விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜிகே வாசன், மத்திய சமூகத்துறை இணை அமைச்சர் நெப்போலியன், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கேஎன் நேரு, சென்னை மேயர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவுக்காக டுரன்டோ ரயில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் 2 ஏசி, 2 மூன்று டையர் பெட்டிகள் கொண்ட இந்த ரயிலின் முதல் பயணத்தில் சுமார் 896 பயணிகள் டெல்லிக்கு கிளம்பினர். அவர்கள் நாளை காலை 10.40 மணிக்கு டெல்லி சென்றடைவார்கள்.












Click it and Unblock the Notifications