உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக போட்டி
சென்னை: சட்டமன்ற இடைத் தேர்தலை புறக்கணித்த அதிமுக, உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள
3 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 14 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 2 மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 54 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு வரும் அக்டோபர் 7ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கியது. மனுக்களை திரும்பப் பெற வரும் 23ம் தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில் தேர்தலில் அதிமுக போட்டியிடுமா அல்லது சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்தது போல பதுங்குமா என்ற கேள்விக் குறி எழுந்தது.
அதற்கேற்ப அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் இந்த விஷயத்தில் ஆழ்ந்த அமைதி காத்து வந்தார்.
இந் நிலையில் இந்தத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி ராஜ்யசபா தேர்தல் புறக்கணிப்பு:
ஆனால், புதுச்சேரி ராஜ்யசபா தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
ராஜ்யசபா தேர்தலை காங்கிரஸ் வியாபாரமாக்கிவிட்டதால் தேர்தலை புறக்கணிப்பதாக அம்மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications