உவரி அருகே அண்ணன் மகளை பலாத்காரம் செய்த சித்தப்பா
Subscribe to Oneindia Tamil
திசையன்விளை: தூத்துக்குடி மாவட்டம் உவரி அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்கரம் செய்த சித்தப்பா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கூட்டபனை கீழத்தெருவை சேர்ந்த ரோபிஸ்டன் மகள் 8 வயது சிறுமி, 3ம் வகுப்பு படித்து வருகிறார்.
இச்சிறுமியை அதே ஊரை சேர்ந்த செல்வன் மகன் கு்மார் என்பவர் கடந்த 18ம் தேதி இரவு 8 மணிக்கு காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இவர் இந்த சிறுமிக்கு சித்தப்பா என கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாயார் பெருனத் உவரி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வனிதா வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் அப்பாசாமி விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications