நெல்லையில் கல்லூரி மாணவி தற்கொலை
நெல்லை: நெல்லை அருகே கல்லூரி விடுதியில் மாணவி தூக்கு போ்ட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை அருகே மேலத்திடியூரில் தனியார் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சம்தவிர்த்தனை அடுத்துள்ள ராமலிங்கபுரத்தை சேர்ந்த சீனிவாசன் மகள் சத்யபாமா, எம்பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி சத்யபாமா படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு அவர் மட்டும் விடுதி அறையில் தனியாக இருந்தார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. அவர் இருந்து அறையில் இருந்து சத்தமும் கேட்கவி்ல்லை.
சக மாணவ, மாணவிகள் அறை ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது சத்யபாமா மின்விசிறியில் துப்பாட்டவால் தூக்கு போட்டு இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசுக்கு தகவல் தெரிவிககப்பட்டது. சேரன்மகாதேவி டிஎஸ்பி அரவிந்த், இன்ஸ்பெக்டர் பொறுப்பு சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி்ற்கு வந்து விசாரணை நடத்தினர்.