தமிழகத்தில் 18 புதிய கடலோர காவல் நிலையங்கள்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: அடுத்த ஆண்டு தமிழகத்தில் மேலும் 18 இடங்களில் கடலோர காவல் நிலையங்கள் துவக்கப்படும் என கடலோர பாதுகாப்பு பிரிவு ஐஜி ராஜேஸ்தாஸ் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக ஊடுருவுவதை தடுப்பதே கடலோர பாதுகாப்பு பிரிவின் முக்கிய நோக்கமாகும்.
தமிழகத்தில் தற்போது 12 கடலோர பாதுகாப்பு காவல் நிலையங்கள் உள்ளன. இதனை அதிகப்படுத்தும் வகையில் மேலும் 18 கடலோர காவல் நிலையங்கள் அடுத்த ஆண்டில் தொடங்கப்படும்.
கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள காடுகளில் பலத்த பாதுகாப்பு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடலோர பகுதிகளில் மிதவை வாகனங்களை நிறுத்தி கண்காணிக்க உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications