For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாய் ஏவியது பிஎஸ்எல்வி

By Staff
Google Oneindia Tamil News

PSLV
ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் கடல் ஆய்வு செயற்கைக் கோளான ஓசன்சாட்-2 மற்றும் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, துருக்கியைச் சேர்ந்த 6 நானோ சாட்டிலைட்டுகள் எனப்படும் சிறிய செயற்கைக் கோள்களையும் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது பிஎஸ்எல்வி ராக்கெட்.

காலை 11.51 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஏவப்பட்ட 20 நிமிடங்களில் இந்த 7 செயற்கைக் கோள்களையும் பிஎஸ்எல்வி அடுத்தடுத்து விண்வெளியில் செலுத்தியது.

கடலில் மீன்வளத்தைக் கண்டறிவது, வானிலை முன்னறிவிப்பு ஆகியவற்று்கு ஓசன்சாட் செயற்கைக் கோள் உதவும்.

970 கிலோ எடையுடன் கூடிய ஓசன்சாட் செயற்கைக் கோளுடன், 6 சிறிய செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்தியது பிஎஸ்எல்வி.

இதில் 4 ஜெர்மனியைச் சேர்ந்தவை. மற்ற இரண்டில் ஒன்று சுவிட்சர்லாந்து மற்றும் இன்னொன்று துருக்கியைச் சேர்ந்ததாகும்.

பி.எஸ்.எல்.வி மூலம் இதுவரை 15 முறை செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இன்று செலுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி- சி14 ரக ராக்கெட்டாகும்.

விண்ணில் பாய்ந்த 1,200 வினாடிகளுக்குள், அதாவது 20 நிமிடங்களில் இந்த 7 செயற்கைக் கோள்களையும் பிஎஸ்எல்வி அடுத்தடுத்து விண்வெளியில் வெற்றிகரமாக செலுத்தியது.

துணை குடியரசுத் தலைவர் பார்த்தார்...

பி.எஸ்.எல்.ஏ. ஏவப்படுவதை துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி நேரில் பார்வையிட்டார்.

ஏவப்பட்ட ஓசன்சாட் செயற்கைக் கோளிலிருந்து சிக்னல்களை மொரீஷியசில் உள்ள இஸ்ரோ மையம் பெற ஆரம்பித்துவிட்டது. அதே போல ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகிய நாடுகள் தங்கள் நானோ சாட்டிலைட்டுகளின் சிக்னல்களை பெற ஆரம்பித்துவிட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X