பள்ளி வேன் கவிழ்ந்து 5 குழந்தைகள் படுகாயம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பள்ளி வேன் ஒன்று கவிழ்ந்ததில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் படுகாயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் உள்ள மாடர்ன் மழலையர் மெட்ரிக்குலேசன் பள்ளி வேன் ஓன்று நேற்று மாலை குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்றது.
அந்த வேன் போகலூர் நூலகம் அருகே சென்றபோது நிலை தடுமாறி கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த பவித்ரா (4), சின்னநாகாச்சி ஹேமாஸ்ரீ (4), ஜமுனாதேவி (7), போகலூர் மகாலட்சுமி (8), செவ்வூர் பிரவீன் (9) மற்றும் போகலூரை சேர்ந்த பள்ளி ஆசிரியை பவுசியா(24) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை அறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியடைந்து மருத்துவமனையில் குவிந்தனர்.
இது குறித்து சத்திரக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications