தமிழகத்தில் இன்று மழை பெய்யும்-வானிலை மையம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் காலையிலிருந்து நல்ல வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது.
கர்நாடகத்தின் உள்பகுதி மற்றும் ஆந்திரத்தின் ராயலசீமா பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
இதன் காரணமாக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் தமிழகத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக நேற்று வேலூர், மேலஆத்தூரில் 90 மில்லி மீட்டர் மழை பெய்தது.
சென்னையைப் பொறுத்தவரை, குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, தாமரைப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 20 மில்லி மீட்டரும், சோழவரத்தில் 30 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே நல்ல வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. கோடை கால வெயில் போல கொளுத்தி வருவதால் மக்கள் புழுக்கத்தில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
அதேசமயம், மாலை நேரங்களில் சில இடங்களில் மழை காணப்படுகிறது. இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுபோலவே உள்ளது. அதேசமயம், நல்ல வெயிலும் அடித்துக் கொண்டிருக்கிரது.
இரவில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications