பனி மூட்டம்-கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
Subscribe to Oneindia Tamil

கொடைக்கானலில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் கிராமங்களுக்கு செல்லும் ரோடுகளில் பல இடங்களில் மண்சரிந்தும், மரங்கள் விழுந்தும் போக்குவரத்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுத்தியுள்ளது.
இதனால் காய்கறிகளை ஏற்ற சரக்கு லாரிகளும் வரவில்லை. உருளை, கேரட் போன்றவை அந்தந்த கிராம சமுதாயக் கூடங்களில், அடுக்கி வைக்கப்பட்டு தேங்கி கிடக்கின்றன.
இந் நிலையில் சில நாட்களாக கொடைக்கானலில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் பஸ் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை கண்டுபிடிக்க சிரமப்படுகின்றனர்.
மேலும் மலை பாதை என்பதால் அவர்கள் முகப்பு விளக்கை போட்டபடியே ஊர்ந்து செல்கின்றனர். இதனால் அன்றாட வாழக்கை நிலை பாதிக்கப்படுகின்றது என்று பொது மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications