கொசுவர்த்தி சுருள் பாக்கெட்டில் ஆபாச சிடியை வைத்து விற்ற பலசரக்கு கடை
கடையம்: நெல்லை மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியில் கொசுவர்த்தி சுருள் டப்பாவுக்குள் ஆபாச சிடிக்களை வைத்து விற்ற மளிகைக் கடைக்காரரை போலீஸார் கைது செய்தனர்.
பொட்டல்புதூர் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட மளிகை கடையில் ஆபாச சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக கடையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடையம் இன்ஸ்பெக்டர் சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், தனிப்பிரிவு தலைமை காவலர் ராமமூர்த்தி ஆகியோர் பொட்டல்புதூர் பகுதியில் உள்ள மளிகை கடைகளை மறைந்திருந்து நோட்டமிட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு கடையில் தினமும் சிலர் கொசுவர்த்தி சுருள் மட்டுமே வாங்கி சென்றனர். இதில் சந்தேகமடைந்த போலீசார் கடையை அதிரடியாக சோதனை போட்டனர்.
அங்கு கொசுவர்த்தி சுருள் பக்கெட்டுகளில் புதுப்பட சிடிக்கள் மற்றும் ஆபாச சிடிக்கள் என மொத்தம் 130 சிடிக்கள் இரு்ந்தன. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து கடையின் உரிமையாளர் திருமலையப்பபுரத்தை சேர்ந்த துர்க்கை முத்து என்ற குமார் என்பவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு உதவியாக இருந்த வீராசமுத்திரத்தை சேர்ந்த ராஜாங்கம், என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications