மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் முயன்றால் சிகரத்தை எட்டலாம் - வேணுசீனிவாசன்
மதுரை: மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டால் சிகரத்தை எட்டமுடியும் என்று இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவர் வேணுசீனிவாசன் தெரிவித்தார்.
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் ருக்மணி சண்முகம் அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவில் அவர் ஆற்றிய உரை:
நாட்டில் தற்போது நிகழும் சூழ்நிலையில் எல்லோருக்கும் முன்னேற வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கையுடன் கடுமையான உழைப்பவர்களுக்கே வெற்றி கிடைக்கும் .
மாணவர்களுக்கு வருங்காலம் பிரகாசமாக உள்ளது.
சாதாரணமாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய தியாகராஜர், தனது கடின உழைப்பால் பெரிய ஆலை அதிபராகி, இக் கல்வி நிறுவனத்தை மாணவர்களுக்கு கலங்கரை விளக்காக்கி, ஓர் ஆலயமாக உருவாக்கித் தந்தார்.
அமெரிக்கா உருவாகி 230 ஆண்டுகளுக்குள் உலகிலேயே மிகப்பெரிய வல்லரசாக உள்ளது. அது போல இந்தியாவையும் பெரிய வல்லரசாக உருவாக்கும் வாய்ப்பு மாணவர்களிடம் உள்ளது என்றார்.
கருத்தரங்கில், ருக்மணி சண்முகம் அறக்கட்டளை சார்பில் 24 ஏழை மாணவ, மாணவியருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.