கேரளாவுக்கு 0.4 டிஎம்சி கூடுதல் நீர் தரும் தமிழகம்
ஊட்டி: பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் கீழ் கேரளாவுக்கு தமிழகம் கூடுதலாக 0.4 டிஎம்சி தண்ணீரை வழங்கவுள்ளது.
ஊட்டியில் இரு மாநில அதிகாரிகள் மட்டத்தில் நடந்த 87வது கூட்டத்தில் இது முடிவெடுக்கப்பட்டது.
இரு மாநில கூட்டு தண்ணீர்ப் பங்கீட்டு குழுக் கூட்டம் ஊட்டியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்...
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் கீழ் கேரளாவின் சித்தூர்புழா நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் 2வது நெல் பருவதத்திற்கு 0.4 டிஎம்சி தண்ணீர் கூடுதலாக விடப்படும்.
வருடந்தோறும் தமிழகம் வழங்கும் 7.25 டிஎம்சி தண்ணீருக்குக் கூடுதலாக இது வழங்கப்படும்.
மேலும் நடப்பு நீர் ஆண்டுக்குத் தேவையான நீரையும் தர தமிழகம் ஒப்புக் கொண்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தமிழகம், கேரளாவுக்கு 6.6 டிஎம்சி தண்ணீரை திறந்து விடும்.
இந்தக் கூட்டத்தில் 2007-08ம் ஆண்டில் தமிழகம் திறந்து விடாத பற்றாக்குறைத் தண்ணீர் குறித்த பிரச்சினையை இரு மாநில அரசுகளிடமும் விடுவது என நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நேற்றைய கூட்டத்தி்ல தமிழக அரசின் சார்பி்ல் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் பஞ்சநாதன் தலைமையிலான தமிழக குழுவும், லத்திகா தலைமையிலான கேரள குழுவும் பங்கேற்றன.












Click it and Unblock the Notifications