துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகிறார் இந்தியத் தூதர் அலோக் பிரசாத்

Subscribe to Oneindia Tamil

Alok Prasad
டெல்லி: இலங்கைக்கான இந்தியத் தூதராக இருக்கும் அலோக் பிரசாத், விரைவில் துணைத் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளார்.

தற்போது அப்பதவியில் இருக்கும் லீலா பொன்னப்பா ஓய்வு பெறவுள்ளார். இதையடுத்து அப்பொறுப்புக்கு அலோக் பிரசாத் வருகிறார்.

வெளியுறவுத்துறை உயர் அதிகாரியான அலோக் பிரசாத் அவரது விருப்பத்திற்கு மாறாக தூதர் பதவியில் நியமிக்கப்பட்டவர் ஆவார். டெல்லியில், மத்திய வெளியுறவு அமைச்சகத்திலேயே அவர் பணியாற்றி விரும்பினார். ஆனாலும் அவரது விருப்பத்திற்கு மாறாக தென்ஆப்ரிக்கா மற்றும் இலங்கைப் பணிகளில் நியமிக்கப்பட்டார்.

தற்போதைய மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நிரூபா ராவ் பதவியிலிருந்து அடுத்த ஆண்டு ஓய்வு பெறுகிறார். அவரது பொறுப்புக்கு அலோக் பிரசாத்தான் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அலோக் பிரசாத் விரைவில் பதவியேற்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தப் பதவியில் தற்போது லீலா பொன்னப்பா உள்ளார். அவர் விரைவில் ஓய்வு பெறுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+