நாகர்கோவிலில் கள்ளநோட்டு கும்பல் கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற மதுரை கும்பலை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் காரில் வந்த ஐந்து பேர் ஆயிரம் ரூபாய் நோட்டு கொடுத்து பிராந்தி வாங்கினர்.
கடையில் இருந்த ஊழியருக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் டாஸ்மாக் கடைக்கு விரைந்து வந்தனர்.
போலீஸை கண்ட அந்த மூன்று பேர் தப்பி ஓட முயன்றனர். ஆனால், போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களுடன் வந்த மேலும் இருவர் பெட்டியுடன் தப்பி ஓடி விட்டனர்.
விசாரணையில், அவர்கள் மூவரும் மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த சௌந்தரபாண்டியன் (19), சரவணன் (19), கணேசன் என்பதும், கள்ளநோட்டை மாற்ற முயன்றதும் தெரிய வந்தது.
இது குறித்து கோட்டார் போலீசார் விசாரணை தொடர்ந்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய இருவரையும் தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications