பிரமோற்சவம்-திருப்பதி வருமானம் குறைந்தது
திருப்பதி: திருப்பதி பிரமோற்சவ திருவிழா உண்டியல் வசூல் இந்த ஆண்டு சுமார் ரூ. 2.15 கோடி குறைந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் பிரமோற்சவ திருவிழா கடந்த 21ம் தேதி ஆரம்பமமானது. விழாவின் 9ம் நாட்களும் திருப்பதி பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. பக்தர்கள் உற்சாகத்துடன் வந்து சுவாமியை தரிசித்து சென்றனர்.
கடைசி மற்றம் 9ம் நாளான நேற்று கொடி இறக்கப்பட்டது. அப்போது சுமார் 7 லட்சம் பக்தர்கள் வரை பெருமானின் ஆசி பெற்று சென்றனர்.
இந்நிலையில் பிரமோற்சவ திருவிழாவின் உண்டியல் வசூல் இந்த ஆண்டு ரூ. 10.77 கோடி மட்டுமே என அறிவிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டை விட சுமார் ரூ. 2.15 கோடி குறைவு என தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ. 12.92 கோடி வசூலானது.
பக்தர்கள் கூட்டம் குறையாத போதும் உண்டியல் வசூல் குறைந்திருப்பதால் உலக பொருளாதார பின்னடைவு காரணமாக பக்தர்கள் காணிக்கை அளவை குறைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications