சொத்து கணக்கை தாக்கல் செய்யாத 89 கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ்
சென்னை: சொத்துக் கணக்கை தாக்கல் செய்யாமல் இருக்கும் சென்னை மாநகராட்சியின் 89 கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி விதிமுறைப்படி கவுன்சிலர்கள் ஆண்டு தோறும் தங்கள் சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். தற்போதைய மாநகராட்சி கவுன்சிலர்கள் 2006 முதல் 2009 வரை 3 ஆண்டுகளுக்கான சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு வரை 25 கவுன்சிலர்கள் மட்டுமே முறையாக சொத்துக் கணக்கை தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து மேயர் மா.சுப்பிரமணியன் அனைத்து கவுன்சிலர்களிடமும் உடனே கணக்கு விபரங்களை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
இதன் காரணமாக பல கவுன்சிலர்கள் தங்கள் சொத்து விபரங்களை தெரிவித்துள்ளனர். மேயர் மா.சுப்பிரமணியன், ஆளுங் கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்கட்சி தலைவர் சைதை ரவி, மண்டல தலைவர்கள் டன்லப் ரவி, சண்முகசுந்திரம், க.தனசேகரன் உள்பட 96 கவுன்சிலர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்துள்ளனர். சொத்துக் கணக்கை தாக்கல் செய்யாத மீதமுள்ள 86 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப மேயர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications