மகாராஷ்டிராவின் ஜின்னா ராஜ் தாக்கரே -பால் தாக்கரே தாக்கு
இது தொடர்பாக பால் தாக்கரே, சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னாவில் எழுதியுள்ள தலையங்கம்...
பிரிட்டிஷ் அரசு ஜின்னாவை தூண்டிவிட்டு, அதன்மூலம் இந்தியாவை பிரித்தது. தற்போது மராத்திய மக்களை பிரிக்க ஒரு புதிய ஜின்னா வந்துவிட்டார். மராத்தியர்களை பிரித்து அதன்மூலம் ஆட்சியை பிடிக்க பார்க்கும் ராஜ் தாக்கரேவுக்கு ஆதரவு அளித்து காங்கிரஸ் தங்களது சொந்த கனவுகளை நிறைவேற்றி கொள்கிறது.
இவர்களது அரசியல் ஜின்னாவின் முஸ்லிம் லீக் அமைப்பை விட கொடூரமானதாக இருக்கிறது. அவர்களாவது தங்களது கோரிக்கையை வெளிப்படையாக கூறி இந்தியாவை பிரித்தார்கள்.
பிரிட்டிஷார் ஜின்னாவை பயன்படுத்தியது போல் காங்கிரஸ், ராஜ் தாக்கரேவை பயன்படுத்தி மராத்தியர்களை துண்டாட பார்க்கிறது. மராத்தியர்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி வரும் ராஜ் தாக்கரேவிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.
ஆனால், மகாராஷ்டிரா தற்போது சிவசேனாவின் காவி ஆடையணிந்து ஒற்றுமையாக இருக்கிறது. அதை அவ்வளவு எளிதாக பிரிக்க முடியாது என்றார்.