வாய்பேச இயலாத பெண் கற்பழிப்பு - 50 வயது நபர் கைது

Subscribe to Oneindia Tamil

அந்தியூர்: ஈரோடு மாவட்டம், வெள்ளித் திருப்பூர் அருகே வாய்பேச முடியாத ஊமைப் பெண்ணை கற்பழிப்பத்த 50 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வெள்ளித்திருப்பூர் அருகே ஜரத்தல் பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (30). வாய்பேச முடியாதவர். தனது வயதான தாயுடன் வசித்து வருகின்றார்.

மல்லிகாவுக்கு கடந்த நான்கு நாட்களாக உடல்நிலை சரியில்லை. இதனால், அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது, அவர் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இது குறித்து , அந்த பெண்ணிடம் கேட்ட போது, அவருக்கு பதில் சொல்ல தெரியவில்லை.

ஆர்.என்.புதூரில் உள்ள செவிட்டூமையர் பள்ளிக்கு அந்தப் பெண் அழைத்து செல்லப்பட்டு, பள்ளி ஆசிரியர்கள் அந்தப் பெண்ணிடம் சைகை மொழியில் கேட்டனர். இதில், ஜரத்தலை சேர்ந்த சீரங்கன் (50) தன்னை கற்ப்பழித்ததாக அந்தப் பெண் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இதன் பேரில், வெள்ளித்திருப்பூர் போலீசார் சீரங்கனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சீரங்கனுக்கு சாந்தாமணி என்ற மனைவியும், ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+