சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட ஆஸி. கைதி
சென்னை: போலி பாஸ்போர்ட் மூலம் சென்னைக்குள் நுழைய முயன்ற ஆஸ்திரேலிய கைதி ஒருவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிங்கப்பூர் திருப்பி அனுப்பப்பட்ட அவனை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தை சேர்ந்தவர் ஜூலியன் மேத்தியாஸ் புச்வால்டு(23). ஜெர்மனியில் பிறந்த இவர் குடும்பத்தின் கிழக்கு கிப்ஸ்லாந்து பகுதியில் வசி்த்து வருகிறார்.
இவர் மார்வெல் அபோஸ்டாலிக் தேவலாலயத்துக்கு செல்லும் போது கரோலின் வாட்சன் என்ற காதலித்து உள்ளார். ஆனால், அந்த பெண் திருமணம் குறித்து எதுவும் சொல்லவில்லை. இதையடுத்து புச்வால்டு அந்த பெண்ணை கடத்தி திருமணம் செய்து கொள்ள முயன்றார்.
இதையடுத்து அவர் மீது போலீஸார் கடத்தல் வழக்கு பதிவு செய்து கடந்த மார்ச் மாதம் 8 நாள் சிறையில் வைத்திருந்தனர். இந்நிலையில் அந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 17ம் தேதி அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு, அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையி்ல் தலையில் கருப்பு டை அடித்த கொண்ட அவர் தான் ஒரு இந்திய டாக்டர் என போலி பாஸ்போர்ட் தயாரித்து சிட்னியில் இருந்து சென்னை வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறினார்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னரே விமான அதிகாரிகள் இந்த உண்மையை கண்டுபிடித்தனர். அவர்கள் உடனடியாக சென்னை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டனர்.
இதற்கிடையே சென்னை விமான நிலையித்தில் தலைமுடி இந்தியரை போலவும், ஆனால் ஆள் வெளிநாட்டவரை போல் வந்திறங்கிய அவரை பார்த்த சென்னை போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது ஆஸ்திரேலிய தகவலும் கிடைக்க, உடனே அவருக்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
அவர் சிங்கப்பூர் அனுப்பப்பட்டார். அங்கு அவரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications