ஷகீல் அக்தரிடம் சென்னை போலீஸ் கமிஷனர் கூடுதல் பொறுப்பு
சென்னை: சென்னை காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் விடுமுறையில் சென்றுள்ளதால், அந்தப் பொறுப்பு கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தரிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக முன்னாள் ஆணையரான கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணனிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதை டிஜிபி அலுவலகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து டிஜிபி அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆணையர் ராஜேந்திரன் சில நாட்கள் விடுப்பில் செல்வதால், அந்த நாட்களில் காவல் துறை கூடுதல் இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) கே.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மைக்கு மாறானது. அவர் தனிப்பட்ட காரணத்துக்காக விடுப்பு எடுத்தது உண்மை.
ஆனால், அவரது விடுப்பு காலத்தில் மூத்த கூடுதல் கமிஷனர் (போக்குவரத்து) முகமது ஷகீல் அக்தர் கூடுதலாக பொறுப்பு ஏற்றுள்ளார். கமிஷனர் தற்காலிக விடுப்பில் செல்லும் போது மூத்த கூடுதல் கமிஷனரை அப்பதவியில் அமர்த்துவது நடைமுறையில் உள்ள ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications