அகதிகளுக்கு இந்திய குடியுரிமை தேவையில்லை- கருணா
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இந்தியாவில் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை கொடுக்க வேண்டிய தேவையில்லை என்று கூறியுள்ளார் கருணா.
இதுகுறித்து கருணா கூறுகையில், இலங்கையில் தற்போது நல்ல முன்னேற்றமான நிலை காணப்படுகிறது. முன்பு போல இப்போது இல்லை. எனவே இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் மீண்டும் இலங்கைக்குத் திரும்பி வர வேண்டும்.
நாங்களும் தமிழர்கள் திரும்பி வருவதை வரவேற்க தயாராகவே இருக்கிறோம் என்றார் கருணா.












Click it and Unblock the Notifications