கங்கை ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு 1 பில்லியன் டாலர் நிதி

Subscribe to Oneindia Tamil

World Bank to fund USD 1 billion for clean Ganga project
வாஷிங்டன்: கங்கை ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு உலக வங்கி 1 பில்லியன் டாலர் நிதியுதவியை அளிக்கவுள்ளது.

இதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை உலக வங்கி அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய கங்கை நதிப் படுகை ஆணையத்தின் முதல் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில்,

தேசிய கங்கை நதிப் படுகை ஆணையத்தின் சார்பில் கங்கை ஆறு சுத்தப்படுத்தப்படவுள்ளது. இதற்காக உலக வங்கி 1 பில்லியன் டாலர் நிதியை வழங்க கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

இது நீண்ட கால கடனாகப் பெறபப்டவுள்ளது. மிகவும் நவீன முறையில் கங்கை நதி சுத்தப்படுத்தப்படவுள்ளது.

டிசம்பர் மாதம் உலக வங்கி தலைவர் ராபர்ட் ஜோல்லிக் டெல்லி வரவுள்ளார். அப்போது கடன் தொகை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

முன்னதாக நடந்த தேசிய கங்கை நதிப் படுகை ஆணையத்தின் கூட்டத்தில், கங்கை ஆற்றை சுத்தப்படுத்துவது குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

3 மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் உத்தரகாண்ட் முதல்வர் ரமேஷ் பொக்ரியால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்கம், உ.பி. முதல்வர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+