பாஜகவுக்கு வாக்களியுங்கள்- வாஜ்பாய் அறிக்கை
டெல்லி: என்னால் பிரசாரத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டதற்காக வருத்தப்படுகிறேன். மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் பாஜகவின் பழம் பெரும் தலைவரான அடல் பிகாரி வாஜ்பாய்.
உடல் நலம் குன்றிய நிலையில், வீட்டி்ல ஓய்வெடுத்து வரும் வாஜ்பாய் இன்று அறிக்கை மூலம் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு மகாராஷ்டிர, ஹரியானா வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடல் நிலை காரணமாக என்னால் பிரசாரம் செய்ய முடியவில்லை. இதற்காக வருத்தப்படுகிறேன்.
கடந்த பத்து ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் வாழ்க்கைக்குப் பாதுகாப்பு அற்றுப் போய் விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுகிறது. எல்லாவற்றிலும் ஊழல் மலிந்து விட்டது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். முதுகை உடைக்கும் விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
வேலைவாய்ப்பின்மை அதிகரித்து விட்டது. காங்கிரஸ் தலைமையிலான அரசு குடிநீர், மின்சாரம், வறட்சி, வெள்ளம் ஆகியவற்றை சமாளிப்பதில் தவறி விட்டது.
எனவே மகாராஷ்டிராவில் இந்த முறை பாஜக - சிவசேனா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வாஜ்பாய்.












Click it and Unblock the Notifications