காவல் நிலைய ரகளை-கைதாகும் பாமக எம்எல்ஏ
சென்னை: மணல் திருடர்களுக்கு ஆதரவாக காவல் நிலையத்தில் புகுந்து போலீஸாரிடம் வாக்குவாதம் செய்து அமளியை ஏற்படுத்திய பாமக எம்.எல்.ஏ கலிவரதனைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பில்ராம்பட்டு பஞ்சாயத்து தலைவர் ஏழுமலை, ஏரியில் இருந்து சட்டத்துக்குப் புறம்பாக மணல் எடுத்தபோது, அதைத் தடுத்த சரவணன் மற்றும் மூன்று பேரை அடித்ததற்காகவும், சட்டவிரோதமாக மணல் கடத்தியதற்காகவும் ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர், அரகண்டநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஏழுமலைக்கும், பா.ம.க. வை சேர்ந்த முகையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.ஏ.டி.கலிவரதனுக்கும் வியாபார ரீதியாக தொடர்பு இருந்து வருகிறது.
அவர், ஏழுமலையை போலீஸ் காவலில் இருந்து விடுவிப்பதற்காக நேற்று காலை சுமார் 10 மணி அளவில் காவல் நிலையத்துக்கு வந்து காவல் நிலைய அதிகாரிகளிடம் தகராறு செய்து அவரை மீட்டு செல்ல முயற்சி செய்துள்ளார்.
திருக்கோயிலூர் டி.எஸ்.பி. முத்து நல்லியப்பன், காவல் நிலையத்துக்கு விரைந்து சென்று ஏழுமலையை விடுவிப்பதை தடுத்துள்ளார்.
ஒரு மணி நேரத்துக்குப் பின் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் வெளியில் சென்றுள்ளார். இது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில், வி.ஏ.டி.கலிவரதன் மீது அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் பிரிவு 294 (பி), 353, 452, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்வதற்காக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications