தமிழக வனப்பகுதி-புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!
Subscribe to Oneindia Tamil

நெல்லையில் நடந்த மாநில வன விலங்குகள் வார விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். இந்த விழா அக்டோபர் 11ம் தேதி நீலகிரியில் முடிவடைகிறது.
நிகழ்ச்சியில் செல்வராஜ் பேசுகையில், கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் வனப் பரப்பு 726 சதுர கிலோமீட்டர் குறைந்துள்ளது. அதேபோல புலிகள் எண்ணிக்கையும், 3642 என்பதிலிருந்து 1411 ஆக குறைந்து விட்டது.
அதேசமயம், தமிழகத்தில் 41 சதுர கிலோமீட்டர் அளவு வனப் பகுதி அதிகரித்துள்ளது. புலிகள் எண்ணிக்கையும் 62 என்பதிலிருந்து 76 ஆக அதிகரித்துள்ளது என்றார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயராமன் பேசுகையில், நெல்லை மாவட்டம் தனது வன வளத்தால்தான் பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications