செய்தி ஆசிரியர் லெனினை வலுக்கட்டாயமாக கைது செய்தனர் - தினமலர்

நடிகர் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் நேற்று மாலை திடீரென கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி...
சென்னை தினமலர் நாளிதழ் அலுவலகத்திற்கு, நேற்று மாலை 6.30 மணியளவில் போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் வில்வராணி முருகன், உதவி கமிஷனர் பன்னீர்செல்வம், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், உமாபதி, முத்துவேல் பாண்டியன் ஆகியோர் சாதாரண உடையில் வந்தனர். "செய்திப் பிரிவினருடன் பேச வேண்டும்' என அவர்கள் தெரிவித்தனர்.
அலுவலகத்தின் உள்ளே வந்து, வரவேற்பறையில் அமர்ந்த போலீஸ் அதிகாரிகளிடம், தினமலர் நாளிதழ் சார்பில் இராமலிங்கம் பேசினார். பின்னர் செய்தி ஆசிரியர் லெனின், போலீஸ் அதிகாரிகளிடம் பேசினார்.
பேசிக் கொண்டிருக்கும் போதே, செய்தி ஆசிரியர் லெனினிடம் போலீசார், "கடந்த 4ம் தேதி நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தி குறித்து, உங்களை விசாரிக்க வேண்டும். கமிஷனர் அலுவலகத்திற்கு வாருங்கள்' என அழைத்தனர். "விசாரணை தானே, இங்கேயே விசாரியுங்கள்' எனக் கூறினார்.
விசாரணைக்கு வந்திருந்த போலீசார் இடையிடையே யாரிடமோ மொபைல் போனில் பேசி உத்தரவுகளைப் பெற்று வந்தனர். "திடீரென உங்களை கைது செய்கிறோம்' என செய்தி ஆசிரியரைப் பார்த்து போலீசார் தெரிவித்தனர்.
செய்தி ஆசிரியர் லெனின், "என்னை கைது செய்ய வாரன்ட் இருக்கிறதா?' என கேட்டதற்கு, "உங்களை கைது செய்ய வாரன்ட் தேவையில்லை' என போலீசார் தெரிவித்தனர். "திடீரென அழைத்தால் எப்படி வர முடியும். பத்திரிகை பணி பாதியில் நிற்கிறது; ஆசிரியரிடம் பேசி விட்டு வருகிறேன்' என லெனின் தெரிவித்ததற்கு, "அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்' எனக் கூறி வலுக்கட்டாயமாக பலப்பிரயோகம் செய்து அவரை இழுத்துச் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது...
இந்த நிலையி்ல் லெனின் கைது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடிகை புவனேஸ்வரி விபசார தடுப்பு பிரிவில் கைது செய்யப்பட்ட போது, கடந்த 4ம் தேதி புவனேஸ்வரி உள்ளிட்ட நடிகைகள் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக நடிகர் சங்க பொதுச்செயலர் ராதாரவி புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் தமிழ்நாடு பெண்கள் கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4ன் கீழ் வழக்கு பதிந்து, இச்செய்தி வெளியிட்ட செய்தி ஆசிரியர் லெனின் நேற்று கைது செய்யப்பட்டார்.
முதன்மை பெருநகர எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட லெனினை, அக்டோபர் 21ம் தேதி சிறையில் அடைக்க எழும்பூர் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications