10ம் தேதி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஆர்ப்பாட்டம்- ராமதாஸ், வைகோ பங்கேற்பு
சென்னை: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வருகிற 10ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் டாக்டர் ராமதாஸ், வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதுகுறித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் போர் முடிந்து 4 மாதங்களுக்கு மேலாகியும் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
இவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் அதற்கான அவசர நடவடிக்கைகளை இந்திய-தமிழக அரசுகள் மேற்கொள்ள வலியுறுத்தியும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வருகிற 10-ந் தேதி மாலை 4 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் மற்றும் நான் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications