கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்
கோவை: கோயம்புத்தூரில் கல்லூரி மாணவர்கள் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோயம்புத்தூர் கோவைப்புதூர் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் இது தொடர்பாக மாணவர்களுக்கும், கல்லூரி நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கல்லூரி நிர்வாகிகள் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீஸார் 6 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அன்றைய தினத்தில் விடுமுறையிலிருந்த மாணவர் சங்கமேஸ்வரன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்தும், அந்த வழக்கை வாபஸ் பெறக் கோரியும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் புகார் மனுவை அளித்தனர். இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், மாணவர்கள் சமாதானமடைந்து போராட்டத்தை கைவிட்டனர்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications