தஞ்சை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து பெண் பலி
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த பெண் அது வெடித்ததில் உடல் சிதறி பலியானார்.
தஞ்சை அருகே உள்ளது வாலமர் கோட்டை கிராமம். அங்கு ராஜாத்தி என்ற 27 வயதுப் பெண் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்தார். அப்போது தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளை எடுத்து அடுக்கி வைத்தார்.
அந்த சமயத்தில் திடீரென ஒரு குண்டு வெடித்துள்ளது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே ராஜாத்தி பலியானார்.
சம்பவம் அறி்நது போலீஸார் விரைந்து சென்று விசாரித்து வருகின்றனர். அவர் எதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications