For Daily Alerts
Just In
பிரபாகரன் ஆவி இலங்கையை ஆட்சி செய்ய விட முடியாது - ராஜபக்சே
இதுகுறித்து அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் ஆவி இந்த நாட்டை ஆள அனுமதிக்க முடியாது. அவரது மரணத்திற்குப் பின்னரும் கூட இலங்கை மீது சிலர் நிர்ப்பந்தம் செய்து வருகின்றனர். ஆனால் அதை அனுமதிக்க முடியாது.
இந்த நிர்ப்பந்தம் இன்றும் கூட தொடருகிறது. நாட்டுக்கு வெளியே மட்டுமல்லாமல், உள்ளேயும் கூட சிலர் பழைய காலத்துக்குப் போக விரும்புகின்றனர். ஆனால் அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நாடு பின்னோக்கிப் போவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
பிரபாகரன் இப்போது இல்லை. அதை அனைவரும் மனதில் வைத்துக் கொண்டு செய்லபட வேண்டும் என்றார் ராஜபக்சே.
Story first published: Friday, October 9, 2009, 16:51 [IST]