யுஎஸ் பத்திரிகையாளர் மீது பாக். மாணவர் ஷூ வீச்சு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அமெரிக்க பத்திரிகையாளர் மீது மாணவர் ஒருவர் ஷூ வீசிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் கிளிப்போர்டு மே என்பவர் நேற்று கராச்சிக்கு பல்கலைக்கழகத்துக்கு வந்தார். அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த இவர் ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்த போது கட்சியில் ஆக்கப்பூர்வமான உறுப்பினராக இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் கராச்சியில் பாகிஸ்தான் சர்வதேச உறவுகள் துறையின் சார்பில் மாணவர்கள் மத்தியில் தீவிரவாதத்தை தடுப்பதில் பாகிஸ்தானின் பங்கு என்ற தலைப்பில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த மாணவர் ஒருவர் தனது ஷூவை கழட்டி அவர் மீது விசினார். அதிர்ஷ்டவசமாக ஷூ மே மீது படவில்லை. உடனடியாக மேவை போலீஸார் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
ஷூவை வீசிய மாணவன், அங்கிருந்த கூட்டத்தில் கலந்து தப்பி விட்டார்.












Click it and Unblock the Notifications