For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் 50 பைசா திட்டம்!

Google Oneindia Tamil News

Reliance Communication
சென்னை: இனி இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் 50 பைசா கட்டணத்தில் எந்த செல்போன் நெட்வொர்க்கிற்கும் பேசும் புதிய வசதியை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அறிமுகப்படுத்தியது.

இந்த வசதியை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன தமிழ்நாடு, கேரளா வட்ட தலைமை அதிகாரி வி.ஜி.சோமசேகர் நேற்று அறிமுகம் செய்து பேசுகையில்,

"ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தற்போது இந்தியா முழுவதும் சுமார் 9 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இன்னும் 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 10 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அந்த நிலையை அடையும் உலக அளவில் செல்போன் இணைப்பு வழங்கும் 6-வது பெரிய நிறுவனமாகவும், இந்தியாவில் 2-வது பெரிய நிறுவனமாகவும் ரிலையன்ஸ் திகழும்.

நிபந்தனை இன்மை, மறைமுக கட்டணமின்மை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு 'ரிலையன்ஸ் சிம்பிள் பிளான்' என்ற இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம்.

இந்த திட்டத்தில், பிரிபெய்ட் இணைப்பில் வெறும் 50 பைசாவுக்கு இந்தியா முழுவதும் எந்த செல்போன் நெட்வொர்க்கிற்கும், லேண்ட்லைனுக்கும் இரவோ பகலோ எப்போது வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம்..." என்றார்.

இந்த திட்டத்திற்கான மொத்த இணைப்பு கட்டணம் ரூ.76 ஆகும். தற்போதைய ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களும் விரும்பினால் புதிய திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X