ராகுலின் கிராமத்து பயணங்களில் தவறில்லை- ஆர்எஸ்எஸ்
ராஜ்கீர் (பீகார்): கிராமங்களுக்கும், தலித் சமுதாயத்தினரின் வீடுகளுக்கும் ராகுல் காந்தி போய் வருவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறியுள்ளது ஆர்.எஸ்.எஸ்.
பாஜகவுக்கு நேர் மாறாக இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளதால் பாஜக வட்டாரம் சலசலத்துள்ளது.
ராகுல் காந்தி திடீர் திடீரென கிராமங்களில் தங்குவதும், தலித் சமுதாயத்தினரின் வீடுகளுக்குப் போய் வருவதையும் சில கட்சிகள் குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியும், பாஜகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். மீடியா பொறுப்பாளர் மோகன் வைத்யா கூறுகையில், ஒவ்வொரு இந்தியரும் கிராமங்களுக்குப் போக வேண்டும். அங்குள்ள மக்களிடம் பேச வேண்டும். அவர்களது பிரச்சினைகளை அறிய வேண்டும். இதில் தவறே இல்லை.
கிராமங்களை மையப்படுத்தி்ததான் வளர்ச்சி இருக்க வேண்டும். கிராமங்களைப் புறக்கணித்து விட்டு யாரும் வளர்ச்சி அடைய முடியாது. வேலை தேடி ஒரு பகுதியை விட்டு இன்னொரு பகுதிக்கு மக்கள் இடம் பெயரும் நிலையையும் இதன் மூலம் தடுக்கலாம் என்றார் வைத்யா.












Click it and Unblock the Notifications