கர்நாடகத்தின் சதாசிவா சுகர்ஸை வாங்கியது ஈஐடி பாரி

Subscribe to Oneindia Tamil

EID Parry
சென்னை: சென்னையைச் சேர்ந்த ஈஐடி பாரி இந்தியா நிறுவனம் கர்நாடகத்தைச் சேர்ந்த சதாசிவா சுகர்ஸ் நிறுவனத்தின் 76 சதவீத பங்குளை வாங்கியுள்ளது. ரூ. 50 கோடிக்கு இந்த டீல் முடிந்துள்ளது.

இதுகுறித்து பாரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு நாளைக்கு 2500 டன் அரவைத் திறன் கொண்ட சர்க்கரை ஆலையை சதாசிவா சுகர்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. இந்த ஆலையின் 76 சதவீத பங்குகளை முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த ஈஐடி பாரி நிறுவனம் வாங்கியுள்ளது.

சதாசிவா சுகர்ஸ் நிறுவனத்தின் ஆலை, வட கர்நாடகத்தில் உள்ள பாகல்கோட்டில் உள்ளது.

இதன் மூலம், மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிக அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் 2வது மாநிலமான கர்நாடகத்திற்குள் ஈஐடி பாடி நிறுவனம் காலடி எடுத்து வைத்துள்ளது.

மேலும், தென் மாநிலங்களில் உள்ள இரு பெரும் நிறுவனங்களின் சங்கமமாகவும் இது மாறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு சர்க்கரை நிறுவனத்தை தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கையகப்படுத்துவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு கோத்தாரி சுகர்ஸ் மற்றும் திருவாரூரான் குழும் ஆகியவற்றின் சர்க்கரை ஆலைகளை தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+