ஸ்வைன்: இந்தியாவில் இதுவரை 385 பேர் பலி
டெல்லி: பன்றி காய்ச்சலுக்கு நேற்று மட்டும் மகாராஷ்டிராவில் 5 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியா முழுவதும் பலி எண்ணிக்கை 385 ஆக அதிகரித்துள்ளது.
பன்றி காய்ச்சல் நோய்க்கு நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இருவர் பலியானார்கள். மேலும், முன்னதாக பலியான மூன்று பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இம்மாநிலத்தில் இதுவரை 158 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 3277 பேருக்கு இந்த நோய் பரவியுள்ளது.
மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 108 பேர் பலியாகியுள்ளனர். இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1203 மட்டும் தான். ஆனால், இதைவிட அதிக நோய் தாக்கம் கொண்ட தமிழகத்தில் (1373 பேருக்கு பரவியுள்ளது) 4 பேர் மட்டுமே பலியாகி இருப்பது தமிழக அரசு மற்றும் மக்களிடையே உள்ள விழிப்புணர்ச்சியை காட்டுகிறது.
அதேபோல் ஆந்திராவில் 42, குஜராத் 36, டெல்லியில் 15, கேரளா 9, ஹரியானா 4, கோவா 3, உத்தர்கண்ட், உத்தர பிரதேசத்தில் தலா 2, ராஜஸ்தான், சட்டீஸ்கரில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.
-
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்!












Click it and Unblock the Notifications