ஜார்க்கண்ட்டில் நக்சல் பந்த்-தண்டவாளம் எரிப்பு

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் பந்த் நடத்த மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து அங்கு இன்று காலை வன்முறை வெடித்தது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 இடங்களில் ரயில்வே தண்டவாங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ஒரு பாலம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பெரும் படை பலத்தை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து இந்த பந்த்துக்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்று அதிகாலை 1 மணியளவில் கிரிடித் மாவட்டம், இஸ்ரி என்ற பகுதிக்கு வந்த 12 ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள், அங்கிருந்த தண்டவாளத்தின் 3 பகுதிகளில் தீவைத்து எரித்தனர். இதனால் தண்டவாளத்தின் ஸ்லிப்பர் கட்டைகள் எரிந்து நாசமாகின. மேலும், தும்ரி- கிரிடித் சாலையிலும் மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்தை தடை செய்தனர்.

இதுதவிர தும்ரி - கிரான்ட் டிரங்க் சாலையை இணைக்கும் சாலைப் பாலத்தையும் அவர்கள் தகர்த்தனர். வெடிகுண்டுகளை வைத்து இந்தப் பாலத்தை அவர்கள் இடித்தனர்.

ரயில் தண்டவாளம் எரிக்கப்பட்டதால், சக்திபூஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+