தென் இலங்கை மாகாண தேர்தல்- ராஜபக்சே கட்சி வெற்றி
கொழும்பு: இலங்கையின் தென் மாகாணத் தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி பெரும் வெற்றி பெற்றது. அந்தக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் முதல்வருமான ஷான் விஜயலால் டி சில்வா அதிக அளவிலான பிரதிநிதித்துவ வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மாகாணத்தில் மொத்தம் உள்ள 3 மாவட்டங்களிலும் இவரே அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட டிசில்வா, காலே மாவட்டத்தில் 90,294 பிரதிநிதித்துவ வாக்குகளைப் பெற்றார்.
நடிகை வெற்றி..
நடிகை அனார்கலி அகர்ஷா 26,726 பிரதிநிதித்துவ வாக்குகளுடன் தென் மாகாணக் கவுன்சிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் அதிக அளவிலான வாக்குகளைப் பெற்றவர் மனுஷா நாணயக்காரா. இவர் காலே மாவட்டத்தில் 38,477 வாக்குகளுடன் 2வது இடம் பிடித்துள்ளார்.
மாத்தரை மாவட்டத்தில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த ஹேமல் குணசேகரா, 63 ஆயிரத்து 323 வாக்குகளுடன் முதலிடம் பிடித்தார். சரத் யாபா அபயவர்த்தனே 2வது இடம் பிடித்தார்.
ஹம்பந்தோட்டா மாவட்டத்தில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த இன்டிகா 56,855 வாக்குகளைப் பெற்றார்.












Click it and Unblock the Notifications