முகாம் வசதிகள்: திமுக-காங் குழு பாராட்டு: இலங்கை
கொழும்பு: இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் செய்யப்பட்டுள்ள வசதிகளை தமிழகத்திலிருந்து வந்துள்ள திமுக -காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் குழு பாராட்டியுள்ளதாக இலங்கை அரசின் இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்திலிருந்து வந்துள்ள பத்து பேர் கொண்ட குழுவினர் வவுனியாவில் உள்ல நலன்புரி மையங்களுக்கு விஜயம் செய்தனர்.
அதிபர் ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் இவர்கள் இலங்கை வந்துள்ளனர். இந்தக் குழுவவின் பிரதிநிதிகள், நலன்புரி மையங்களில் உள்ளோருக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளைப் பாராட்டினர்.
மேலும் இந்த மையங்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்யவும் அவர்கள் ஒத்துக் கொண்டனர்.
தங்களது ஐந்து நாள் பயணத்தின்போது இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களையும் இந்தக் குழுவினர் பார்வையிடவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்சே மீது இந்தியாவுக்கு நல்ல நம்பிக்கை...
இதற்கிடையே தமிழக குழுவினரின் விஜயம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அதிபர் ராஜபக்சே மீதான இந்தியாவின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழக குழுவினரின் வருகை அமைந்துள்ளது.
இலங்கை அரசின் உள்ளூர் மற்றும் வெளியுறவுக் கொள்கை வெளிப்படையாக உள்ளதை சர்வதேச சமுதாயம் பாராட்டி வருகிறது.
எனவே, சர்வதேச ராணுவ கோர்ட்டிலோ அல்லது விசாரணைக் குழு முன்போ இலங்கைத் தலைவர்களை நிறுத்துவதோ அல்லது போர் ஹீரோக்களை நிறுத்துவதோ இயலாத காரியமாகும்.
இதுதொடர்பான எந்த சட்ட ஒப்பந்தத்திலும் இலங்கை கையெழுத்திடவில்லை. 2002ம் ஆண்டு இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்தது. ஆனால் அப்போதைய பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே அதில் கையெழுத்திட மறுத்து விட்டார்.
ஆனால் அப்படி ஒன்று நடந்திருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரை சர்வதேச சமுதாயத்தின் முன்பு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்க முடியும்.
ஆனால் ரனில் விக்கிரமசிங்கே இப்போது கூறுகையில், ராணுவக் கோர்ட் முன்பு இலங்கைத் தலைவர்களை நிறுத்த வேண்டும் என்கிறார். இப்படிக் கூறியுள்ளதன் மூலம், நமது வீரர்களை அவர் அவமதித்து விட்டார்.
கடந்த எட்டு தேர்தல்களில் அதிபர் ராஜபக்சே தொடர்ந்து வெற்றி பெற்று வந்திருக்கிறார். இதன் மூலம் அவர் போகும் பாதை சரியானதே என்பது நிரூபணமாகியுளளது. அவரது நடவடிக்கைளை மக்கள் அங்கீகரித்து வருகின்றனர். இது தென் மாகாணத் தேர்தல் முடிவிலும் எதிரொலித்துள்ளது என்றார் பொகல்லகாமா.
ராஜபக்சேவுடன் இன்று சந்திப்பு:
இந் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் குழு இன்று இரவு ராஜபக்சேவை சந்திக்கின்றனர்.
இன்று கண்டிக்கு விஜயம் செய்த இக் குழு தோட்டத் தொழிலாளர்களான மலையகத் தமிழர்களை அவர்கள் சந்திக்கிறார்கள். பின்னர் கொழும்பு செல்லும் அவர்கள் இரவில் அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசுகின்றனர்.
அப்போது முதல்வர் அளித்துள்ள கடிதத்தையும் ராஜபக்சேவிடம் அவர்கள் ஒப்படைக்கின்றனர். தமிழர்களுக்கான நிவாரணப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கின்றனர்.
முகாம்களைப் பார்க்க கட்டுப்பாடு இல்லை..
இதற்கிடையே, தங்களது நேற்றைய பயணம் குறித்து டி.ஆர்.பாலு, பிபிசி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில்,
மேனிக் பார்மில் உள்ள 8 முகாம்களுக்கு நாங்கள் சென்றோம். அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினோம்.
முகாமில் இருப்பவர்களை தனித்தனியாகவும், குழுவாகவும் சந்தித்து பேசினோம். எங்கள் குழுவில் உள்ள 10 பேருக்குமே மக்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
மக்களை சந்திப்பதற்கு இலங்கை அரசு எங்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்க வில்லை. அங்கு செல்லக்கூடாது, இங்கு செல்லக்கூடாது என்று எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. முழு சுதந்திரம் வழங்கப்பட்டது.
முகாம் மக்களை சந்தித்து பேசியது தொடர்பாக அறிக்கை ஒன்றை தயாரித்து தமிழக முதல்வர் கருணாநிதியிடம் வழங்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications