14 எண்ணெய்ப் படுகைகளை அரசிடம் சரண்டர் செய்த ரிலையன்ஸ்!
டெல்லி: ரூ.1400 கோடி செலவு செய்தும் போதிய எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைக்காத 14 எண்ணெய்ப்படுகைகளை அரசிடம் சரண்டர் செய்தது ரிலையன்ஸ் நிறுவனம்.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் 45 எண்ணெய்ப் படுகைகளை அரசிடமிருந்து பெற்ற ரிலையன்ஸ், அரசுக்காக எண்ணெய் மற்றும் எரிவாயுவை அகழ்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இவற்றுக்காக மொத்தம் ரூ.13200 கோடியை ரிலைன்யன்ஸ் செலவழித்தது.
ஆனால் இவற்றில் கோதாவரியின் கேஜி 6 மற்றும் மகாநதியின் என்இசி -25 படுகைகளில் மட்டும் கணிசமான எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைத்துள்ளது.
மற்றவற்றில் வணிக நோக்கில் திருப்தியான அளவு எண்ணெய் கிடைக்கவில்லையாம்.
எனவே 14 எண்ணெய்ப் படுகைகளை அரசிடமே ரிலையன்ஸ் ஒப்படைத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றை ஆழத் துளைத்தெடுக்க ரிலையன்ஸ் மொத்தம் ரூ 1400 கோடியை செலவழித்தது ரிலையன்ஸ். இந்தப் பணத்தை அதனால் திரும்பப் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications