நீதிபதி பி.டி.தினகரன் நிலம்: ஆய்வு செய்த தாசில்தாருக்கு போனில் மிரட்டல்
சென்னை: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக மேலும் ஒரு சிக்கல் அவருக்கு எழுந்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்தவரான பி.டி.தினகரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் 12 ஆண்டுகள் நீதிபதியாக பதவி வகித்தார். இதையடுத்து 2008ம் ஆண்டு அவர் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிகக்ப்பட்டார்.
சமீபத்தில், பி.டி.தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதியாக்குவதற்கான பரிந்துரையை நீதிபதிகள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குழு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு அனுப்பியது.
இந்த நிலையில் தனது சொந்த மாவட்டமான திருவள்ளூரில் வருமானத்தை மீறி பெருமளவிலான நிலத்தை தினகரன் வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாரணைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தினகரனின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந் நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அனுப்பிய அறிக்கையில், நீதிபதியின் பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களுக்கான வேலிகளை நீக்க முயற்சிகள் நடந்தது உண்மைதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாசில்தாருக்கு மிரட்டல்...
இந்த நிலையில், நில ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்கச் சென்ற தாசில்தாரை யாரோ சிலர் செல்போன் மூலம் மிரட்டியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் இருவர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது வேலிகள் அகற்றப்பட்டிருப்பது உண்மை என்று தெரிய வந்தது. மேலும், அந்த அதிகாரிகளுக்கு தொலைபேசியில் மிரட்டலும் வந்தது என்றார்.
தனக்கு மிரட்டல் வந்தது உண்மைதான் என்று ஆய்வு செய்த அதிகாரிகளில் ஒருவரான தாசில்தார் ஆர்.விஜயராகவலு உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கிராமத்திற்கு நாங்கள் சென்றவுடன், அந்த சொத்துக்களின் நிர்வாகி எனக் கூறப்படும் ஒருவர் என்னிடம் வந்து செல்போனைக் கொடுத்து ஒருவருடன் பேசுமாறு கூறினார். அந்தப் பக்கம் பேசிய நபர், நான் ஒரு நீதிபதி, தவறான அறிக்கை கொடுத்தால் வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டினார் என்றார்.
இந்த விவகாரம் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிக்குமார் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications