கோர்ட்டுக்கு வருவதைத் தவிர்த்த நீதிபதி தினகரன்
பெங்களூர்: நில ஆக்கிரமிப்பு விவகாரம் வலுத்துள்ள நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் வழக்கு விசாரணைக்கு வருவதைத் தவி்ர்த்தார். இதனால் அவரது தலைமையிலான முதல் பெஞ்ச் முன்பு விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் தள்ளி வைக்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தில் நீதிபதி பி.டி.தினகரன் பெருமளவிலான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார்கள் கிளம்பின. இதையடுத்து இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிக்குமாருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பினர். அதில், ஆக்கிரமிப்பு நடந்துள்ளது உண்மைதான் என்றும், வேலிகளை அகற்றவும் முயற்சிகள் நடந்திருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
மேலும், விசாரணைக்காக சென்ற தாசில்தாருக்கு தொலைபேசியில் யாரிடமிருந்தோ மிரட்டல் வந்ததாகவும் புது சர்ச்சை வெடித்தது.
இதையடுத்து தலைமை நீதிபதி பி.டி.தினகரன், உச்சநீதிமன்ற காலேஜியத்துக்கு பதில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், திருவள்ளூர் ஆட்சித் தலைவர் அவசர கதியில், அறிக்கை அனுப்பியிருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று உச்சநீதிமன்ற காலேஜியம் விசாரிக்கவுள்ளது. இந்த நிலையில் நேற்று நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி பி.டி.தினகரன் வரவில்லை. இதனால் அவரது தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் தள்ளி வைக்கப்பட்டன.
பி.டி.தினகரன் வராததற்கு காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இன்று பி.டி.தினகரன் விசாரணைக்கு வருவார் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
தலைமை நீதிபதி பி.டி.தினகரன் மீதான புகார்கள் தெளிவாகும் வரை அவர் வழக்கு விசாரணையில் பங்கேற்கக் கூடாது என்று பெங்களூர் வக்கீல்கள் சங்கம் அவரை வலியுறுத்தியுள்ளது. இருப்பினும் ஒரு பிரிவு வக்கீல்கள் அவர் வழக்குகளை விசாரிக்கலாம் என ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications