கண்ணிவெடிகளை அகற்றிய பிறகே தமிழர்கள் மீண்டும் குடியமர்த்தல்-தமிழக குழுவிடம் ராஜபக்சே
அப்போது தமிழர் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றிய பிறகே முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அந்தப் பகுதிகளில் மீண்டும் குடியமர்த்தப்படுவர் என தமிழக குழுவிடம் ராஜபக்சே தெரிவித்தார்.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10ஆம் தேதி மதியம் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர்.
முதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திய தமிழக குழுவினர், கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்களிடம் குறை கேட்டனர்.
மாலையில், வவுனியாவில் உள்ள மானிக் பார்ம் வளாகத்தில் உள்ள 5 முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களை தமிழக குழுவினர் பார்வையிட்டனர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆய்வு நிகழ்ச்சி, முழுமையாக வீடியோ படமாக எடுக்கப்பட்டது. பின்னர் குழுவினர் பல பிரிவுகளாக சென்று தமிழ் அகதிகளிடம் குறை கேட்டனர்.
பின்னர் இந்திய வம்சாவளி தமிழ் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலையகப்பகுதிக்கு தமிழக குழுவினர் திங்கட்கிழமை சென்றிருந்தனர். இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பின் பேரில் அங்கு சென்றனர்.
திங்கள்கிழமை ஹட்டன் நகருக்கு வந்து சேர்ந்த அவர்களுக்கு, வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.
தேயிலை தோட்டங்கள் நிறைந்த நுவரேலியாவுக்கும் தமிழக குழுவினர் சென்றனர். தொண்டமான் பெயரில் அமைந்துள்ள தோட்டப்பயிர் பயிற்சி மையத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். இரவில், மலையக பகுதியில் தமிழக குழுவினர் தங்கினார்கள்.
அதிபர் ராஜபக்சேவை தமிழக குழுவினர் திங்கட்கிழமை சந்தித்து பேசுவதாக இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு, நேற்று அந்த சந்திப்பு நடந்தது.
ராஜபக்சேவை சந்தித்த திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழுவினரை ராஜபக்சே, அவரது தம்பி பசில் ராஜபக்சே ஆகியோர் வரவேற்றனர். ராஜபக்சேவுக்கு தமிழக குழுவினர் பொன்னாடை போர்த்தினர். பசில் ராஜபக்சேவை, டி.ஆர். பாலு, கட்டித் தழுவிக் கொண்டார்.
தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பின்னர் திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் ராஜபக்சேவிடம் வலியுறுத்தினர். சந்திப்பின் போது இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானும் உடனிருந்தார்.
முகாம் நிலை குறித்து திருப்தி!:
இந்த சந்திப்பு குறித்து இலங்கை அரசின் தகவல் தொடர்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், அதிபரை சந்தித்த தமிழக குழுவினர், இடம் பெயர்ந்தோருக்கான அகதிகள் முகாம்கலில் உள்ள வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்துக் கொண்டனர்.
தங்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு அழைப்பு விடுத்ததற்காகவும், போதிய ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தற்காகவும் அவர்கள் அதிருபருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். தங்களை சந்திக்க அனுமதி அளித்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ் மக்களை மறு குடியமர்த்தும் நடவடிக்கையை வேகப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர்கள், அதுதொடர்பாக இலங்கை அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளையும் பாராட்டினர்.
மழைக்காலம் நெருங்கி வருவதால், அதற்குள் தமிழர்களை இடம் பெயரச் செய்ய வேண்டியது அவசியம் என்றும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழுவினர் அதிபரைக் கேட்டுக் கொண்டனர். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ராஜபக்சே தெரிவித்தார்.
அவர்களிடம் அதிபர் பேசுகையில், எந்தவகையான தீர்வாக இருந்தாலும் அது அனைத்து சமுதாயத்தினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்.
இலங்கை பன்முக இனப் பிரிவுகளால் ஆன ஒரு நாடாகும். கொழும்பு நகரில் கிட்டத்தட்ட 65 ஆயிரம் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
தமிழகத்திலிருந்து எம்.பிக்கள் குழு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இங்குள்ள மக்களின் நிலையை நீங்களே வந்து பார்த்து புரிந்து கொள்வது அவசியமாகும். ஏனென்றால் இடம் பெயர்ந்தோர் முகாம்கள் குறித்து வெளியில் அவதூறு பரப்பப்படுகிறது. விஷமப் பிரசாரம் செய்து வருகிறார்கள். தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதை சரி பார்த்துக் கொள்ள இந்தப் பயணம் உதவியிருக்கும் என்றார்.
பின்னர் அதிபரின் ஆலோசகரும், தம்பியுமான பசில் ராஜபக்சே கூறுகையில், இன்னும் 2 நாட்களில் முகாம்களில் உள்ள இட நெருக்கடி, கூட்ட நெரிசல் குறையும் என்றார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே













Click it and Unblock the Notifications