இலங்கை தூதரக தாக்குதல்-கிருஷ்ணசாமிக்கு முன்ஜாமீன்
சென்னை: டெல்லியில் இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்களை விடுதலை செய்யக்கோரியும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கண்டித்தும் செப்டம்பர் 2ம் தேதி டெல்லியில் கிருஷ்ணசாமி தலைமையில் அக் கட்சியினர் பேரணி நடத்தினர்.
அதே நாளில் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இது தொடர்பாக கிருஷ்ணசாமி மீது புகார் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்தக் கட்சியினரைக் கைது செய்ய டெல்ல போலீஸ் குழு சென்னை வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில் தனக்கு முன் ஜாமீன் கோரி கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த நீதிமன்றம் கிருஷ்ணசாமிக்கு முன்ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.












Click it and Unblock the Notifications