மாடிப்படியில் செக்ஸ் வைத்தேன்- பெக்கர்
லண்டன் நோபு ஹோட்டலில், மாடிப்படியில் வைத்து மாடல் அழகி ஏஞ்செலா எர்மகோவாவுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டேன். அப்போது எனது தனிமையால் அவ்வாறு செய்து விட்டேன். ஆனால் இப்போது நினைத்தால் மிகவும் வெட்கமாக, அவமானமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் முன்னாள் டென்னிஸ் சாம்பியன் போரிஸ் பெக்கர்.இதுகுறித்து ஒரு டிவி பேட்டியில் பெக்கர் கூறியுள்ளதாவது...
குளியலறையாக இருந்திருந்தால் கூட சரியாக இருந்திருக்கும். ஆனால் எதிர்பாராதவிதமாக மாடிப்படியில் அவ்வாறு நடந்து கொள்ள நேரிட்டு விட்டது.
அது மிக நீண்ட உறவு கூட அல்ல. ஐந்து விநாடிகள் மட்டுமே அந்த உறவு நீடித்தது.
1999ம் ஆண்டு நான் விம்பிள்டன் போட்டியில் பங்கேற்ற பின்னர் எனது டென்னிஸ் ஓய்வை அறிவித்தேன். அதன் பின்னர் எனது மனதில் அமைதி இல்லை. தனிமையாக உணர்ந்தேன். அந்த தனிமைதான் என்னை அவ்வாறு நடக்க தூண்டி விட்டது.
இந்த உறவால் நான் மிகவும் வெட்கப்பட்டுப் போனேன். அது எனது திருமண வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு என்னால் அதிலிருந்து மீள முடியவில்லை.
எனது ஓய்வை அறிவித்த பின்னர் நண்பர்களோடு விருந்துக்குப் போக திட்டமிட்டிருந்தேன். ஆனால் பின்னர் ரத்து செய்து விட்டேன். மிகவும் தனிமையாக உணர்ந்தேன். அப்போதுதான் ஏஞ்செலாவுடன் உறவு ஏற்பட்டு விட்டது என்று கூறியுள்ளார் பெக்கர்.
இந்த செக்ஸ் உறவை அறிந்த பெக்கரின் மனைவி பார்பரா பெல்டஸ், அவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்.
ஏஞ்செலாவுடன் உறவு கொண்டதன் மூலம் அவருக்கு அன்னா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. முதலில் அந்தக் குழந்தை தனக்குப் பிறந்திருக்காது என்று நினைத்திருந்தார். ஆனால் தற்போது அந்தக் குழந்தை மீது இப்போது பாசத்தைப் பொழிகிறார் பெக்கர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு அழகிய மகள் இருக்கிறாள். என்னால் ஒரு விநாடியைக் கூட அவளைப் பார்க்காமல் இருக்க முடியாது. அவளை நான் மிகவும் விரும்புகிறேன். அன்னா பிறந்தது அவளது தவறல்ல. தவறான குழந்தையும் அல்ல என்கிறார் பெக்கர்.
ஏற்கனவே பெக்கருக்கு அன்னாவையும் சேர்த்து 3 குழந்தைகள் உள்ளன. தற்போதைய மனைவியான மாடல் அழகி ஷெர்லி கெரசன்பெர்க் தற்போது கர்ப்பமாக உள்ளார். இதனால் தனது 4வது குழந்தையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார் பெக்கர்.