பிரசார் பாரதி இயக்குனர் குழுவை கலைக்க அம்பிகா சோனி முடிவு?

அல்லது அந்த அமைப்பை கூண்டோடு மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
பிரசார் பாரதி இயக்குனர்களுக்கும், நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையே பெரும் பாலிடிக்ஸ் நடந்து வருகிறது. இந்த மோதல்களால் அந்த நிறுவனத்தின் செயல்பாடே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும் பெரும் அதிகாரம் கொண்ட இந்த அமைப்பில் பெரும் ஊழல்களும் முறைகேடுகளும் நடந்து வருகின்றன.
இதையடுத்து பிரசார் பாரதி செயல்படும் விதம் குறித்து விரிவான அறிக்கையை தகவல் ஒலிபரப்புத்துறை உருவாக்கியுள்ளது. இந்த அறிக்கை தான் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதில், பிரசார் பாரதி இயக்குநர்கள், நிர்வாக அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து அதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது என்று தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியுள்ளார்.
தகவல், ஒலிபரப்புத்துறையி்ன் தலையீடு இல்லாமல் மத்திய அரசின் தொலைக்காட்சி, ரேடியோ ஆகியவை இயங்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்
உருவாக்கப்பட்டது தான் பிரசார் பாரதி அமைப்பு.
இதில் தகவல், ஒலிபரப்புத்துறை தலையீடக் கூட முடியாத அளவுக்கு சுதந்திரமான அமைப்பாக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் அமைச்சரவையால் கூட மாற்றம் செய்ய முடியாது.
அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமானால் நாடாளுமன்றத்தின் அனுமதியோடு தான் பிரதமர் செய்ய முடியும்.
அந்த அளவுக்கு அதிகாரம் கொண்ட நிறுவனம் பிரசார் பாரதி.
இந் நிலையல் ஒரு தனிச் சட்டம் கொண்டு வந்து பிரசார் பாரதியின் இயக்குநர் குழுவையே கூண்டோடு கலைத்துவிட அமைச்சர் அம்பிகா சோனி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சட்ட அமைச்சகத்திடமும் அவர் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது.
அப்போது பிரசார் பாரதியின் செயல்பாடுகள் சரிவர இல்லையென தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் கருதினால் தனக்குள்ள அதிகாரத்தின்மூலம் அதன் செயல்பாடுகளை முடக்கலாம் சட்ட அமைச்சகம் கருத்து தெரிவித்ததாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications