நடுவானில் பயணிக்கு மாரடைப்பு-சென்னையில் தரையிறங்கிய எதிஹாட் விமானம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அபுதாபியில் இருந்து கோலாலம்பூர் சென்று கொண்டிருந்த விமானத்தில் நடு வானில் ஒரு பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அந்த விமானம் அவசரமாக சென்னையில் தரையிறங்கியது.
எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் சென்னை மீது பறந்து கொண்டிருந்தபோது இஸ்மாயில் (55) என்ற பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
கடு்ம் நெஞ்சு வலியால் அவர் துடித்ததையடுத்து விமானத்தை உடனே தரையிறக்க சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிடம் விமானி அனுமதி கோரினார்.
உடனே அனுமதி தரப்பட்டதையடுத்து அந்த விமானம் தரையிறங்கியது. இதையடுத்து அந்தப் பயணி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படடார்.
இதையடுத்து அந்த விமானம் கோலாலம்பூர் கிளம்பிச் சென்றது.












Click it and Unblock the Notifications