கேரளாவுக்கு கடத்தப்படும் இலவச தொலைக்காட்சி பெட்டிகள்
தமிழகமெங்கும் ஊராட்சி பகுதிகளிலும், பேரூராட்சி பகுதிகளிலும் மாநகராட்சிப் பகுதிகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் பணி நடந்து வருகிறது.
அரசு இலவசமாக வழங்கும் வண்ணத் தொலைகாட்சி பெட்டிகள் தற்போது நெல்லை மாவட்டம் புதூர் (செ) பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வருகிறது.
சுமார் 3,129 பேருக்கு வழங்கப்படும் இந்த வண்ணத் தொலைகாட்சி பெட்டிகளை ரேசன் அரிசியை கடத்தும் குமபலை சேர்ந்தவர்கள் டிவி பெட்டி வழங்கும் பகுதிகுக்கு சென்று ரூ.1000 முதல் ரூ.1500 வரை கொடுத்து வாங்கி அருகிலுள்ள அண்டை மாநிலமான கேரளாவுக்கு பேருந்து, ரயில், ஆட்டோ மூலம் கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை நேரம் என்பதால் டிவி வாங்கிய பயனாளிகள் கிடைத்த வரை லாபம் என்று எண்ணி விற்பனை செய்து வருகின்றனர்.
அரசின் இலவச திட்டம் மூலம் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்க புளியரையில் கடத்தல் தடுப்பு சோதனை சாவடி இருந்தும் கடத்தல் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.