உலகத் தமிழ் செம்மொழி மாநாடு- அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: கருணாநிதி
சென்னை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு கட்சிப் பாகுபாடின்றி அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும், தங்களது பிரதிநிதிகளையாவது அனுப்பி வைக்க வேண்டும் என்று சட்டசபை கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப் பேரவையில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழக அரசு சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும் ஜூன் 24 முதல் 27 வரை கோவையில் நடைபெற உள்ளது.
கட்சி வேறுபாடின்றி தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் அதன் ஆக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டிற்கு தங்களின் ஒத்துழைப்பைப் பெரிதும் விரும்புகிறேன்.
மாநாட்டில் தாங்கள் கலந்துகொள்ள வேண்டும். அதோடு மாநாட்டுக்கென அமைக்கப்பட உள்ள பல்வேறு குழுக்களில் தங்கள் கட்சியின் சார்பாக தாங்களோ அல்லது தங்களது பிரதிநிதி ஒருவரோ இடம்பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
அதற்கான பெயரை அக்டோபர் 25-ம் தேதிக்குள் எழுதி அனுப்பிட வேண்டுகிறேன் என்று கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications